Tuesday, February 16, 2010

திருவண்ணாமலை

கடவுளை வணங்கி நல்ல வாழ்க்கை வாழச் சொல்வது சமயம்.

கடவுளை வணங்குவது எப்படி என்று சமயம் சொல்லும்.

நல்ல வாழ்க்கை வாழ்வது எப்படி என்றும் சமயம் சொல்லும்.

நல்ல நினைப்பும் நல்ல பேச்சும் நல்ல செயலும் நல்ல வாழ்க்கைக்கு அடிப்படை.

இவற்றைப் புண்ணியம் என்பார்கள் சான்றோர்கள்.

தீய நினைப்பும் தீய பேச்சும் தீய செயலும் வாழ்க்கையைக் கெடுத்துவிடும்.

இவற்றைப் பாவம் என்பார்கள் சான்றோர்கள்.

புண்ணியம் நமக்கு நன்மை தரும்.

பாவம் நமக்குத் தீமை தரும்.

புண்ணியம் செய்யத் தூண்டுவது கடவுள் நெறி.

பாவம் செய்யாமல் இருக்க உதவுவது கடவுள் நெறி.

கடவுள் நெறியே சமய நெறி.

கங்கை யாடிலென் காவிரி யாடிலென்
கொங்கு தண்கும ரித்துறை யாடிலென்
ஓங்கு மாகட லோதநீ ராடிலென்
எங்கும் ஈசன் எனாதவர்க் கில்லையே.

No comments:

Post a Comment