Monday, November 22, 2010

திருவண்ணாமலை

தேடிச் சென்று திருந்தடி ஏத்துமின்
நாடி வந்து அவர் நம்மையும் ஆட்கொள்வர்
ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ
ஓடிப்போம் நமது உள்ள வினைகளே.

`தேடிச் சென்று இறைவர் திருவடிகளைப் புகழ்ந்து போற்றுங்கள்; நம்மையும் அவர் நாடிவந்து ஆட்கொள்வார்; ஆடியும் பாடியும் திருவண்ணாமலையைக் கைகூப்பித் தொழுவோமானால் நம் வினைகள் ஓடிப் போகும்.’

திருந்தடி – செம்மையான திருவடிகள்: என்றும் செம்பொருளாக உள்ள திருவடிகள்

ஏத்துமின் – புகழ்ந்து போற்றுங்கள்

வந்தவர் – வந்து அவர்: அவர் வந்து

ஆட்கொள்வார்: இறையருளுக்கு உரியவர்களாக ஆக்குவார்

அண்ணாமலை – ஊரின் பெயர்: திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள இறைவர்